Saturday, January 30, 2016

கோமாவில் இருப்பவனுக்கும், முட்டாளாக இருப்பவனுக்கும் தன் பிரச்சனை என்ன என்று தெரியாது.

https://www.facebook.com/kilimookku/posts/1513084975578019?fref=nf\\

கோமாவில் இருப்பவனுக்கும், முட்டாளாக இருப்பவனுக்கும் தன் பிரச்சனை என்ன என்று தெரியாது. ஆனால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர்களை தவிர அனைவருக்கும் தெளிவாக தெரியும். ‪#‎brunosophy‬ 
(சொன்னவர் மருத்துவர் புருனோ)

December 6, 2015

A great work done by my friends Officer Ravi Kumar , Dr. Mariano Anto Bruno Mascarenhas and தனசேகர் சுப்பிரமணியம்(Dhanasekar ) All these three are united by Tamil writing space on social media.
Following is as described by Officer Ravikumar 
"Later we took blankets, dresses, medicines and water purifiers to the worst hit Labor colony area, Guindy. People were so desperate to get blankets. We had tough time distributing the materials. Its human tendency to have more than needed. So we the fiekd workers end up giving materials to the same people again and again. After a point people become desperate abd we have to bear the pinches.,etc of the people. Equidistribution is a myth. Mariano was disturbed by the condition of Infant Jesus church.
From there we went to St. Thomas mount. Marians school and Helen school, were we distributed blankets, chappals, medicines and two water purifiers. Lots of children were there.
We saw order at the church controlled crowd. Most of the people were Hindus. I met the Father and requested him to feed thousand starving people at Ambedkar Nagar near Jazz cinema. He made arrangements.
But we met a group of individuals from Sunguvarchathram, at st. Helens school, who had extra food offered to serve the people. 
I took them and around 500 people were fed hot food of so much variety. Finally at 4 we took our lunch at Nandambakkam Sangeetha...and Dhanasekar went back to Coimbatore with lot of memories...
Thank you..,Chennai Treckers Association, Dhanasekar and those friends from Sunguvarchathram...Mariano. ..you all are unsung heroes...i salute you...no one knows about your service nor does any one laud you...but you guys are the proof that the world is still inhabited by humans..."



மாநில அரசின் பாடத்திட்டம் சரி.
அவர்கள் தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் 
தற்பொழுதும் இருக்கும் தேர்வு முறைக்கு ஏற்ப மாணவரக்ள் படிக்கிறார்கள்.
அதில் அதிக முயற்சி உடையவர்கள் வெற்றி பெருகிறார்கள்
அந்த தேர்வுமுறையில் விமர்சனம் இருந்தாலும், அந்த மாணவர்களை பாராட்டுகிறேன்
இதை நீங்கள் கோழிப்பண்ணை என்கிறீர்கள் 
அதே போல் 
ஐ.ஐ.டி நுழைவு தேர்வு பாடத்திட்டம் என்பது 17 வயது மாணவனுக்கு முதுகலை அளவு கேட்பது
இது மிகவும் முட்டாள்தனமான மூடத்தனமானது 
பன்றி பண்ணைகளில் (தனியாக கோச்சிங்) சேர்ந்து படிப்பவர்கள் தான் இந்த தேர்விலும் மதிப்பெண் பெறுகிறார்கள்
அந்த தேர்வுமுறையில் விமர்சனம் இருந்தாலும், அந்த மாணவர்களை பாராட்டுகிறேன்.
இரண்டிலுமே - குறைகள் மாணவர்களிடம் இல்லை
எனவே 
மாநில திட்டத்தில் முதல் மதிப்பெண் எடுப்பவர்களை பார்த்து நீங்கள் கோழி பண்ணை பிள்ளைகள் என்று கூறினால் 
பள்ளி பாடம் படித்து ஒன்று செய்ய முடியாமல் சிறப்பு கோச்சிங்கால் மட்டுமே IIT JEE தேர்வு எழுதும் மாணவர்களை பன்றிப்பண்ணை பிள்ளைகள் என்று கூற வேண்டும்.


Revolutionary ideas to reform Education in Tamil Nadu to give equal importance to both English and Tamil medium, thus improving the quality of the education. If I ever become a Chief Minister / Prime Minister , I would install Dr. Mariano Anto Bruno Mascarenhas as my Government's Education Minister. Article is given in English as well as Tamil in line with Tamil Nadu Government's two language policy. smile emoticon If you have any questions , you can ask it on Dr. Bruno's wall.


My solution for the debate regarding Medium of Education
---------------------------------------------------------------------------
1. There should be a common and single Medium of Education - The Bilingual Medium of Education 
2. Books should be bilingual
Left Side - Even Number Pages can be in Tamil
Right Side - Odd Number Pages can be in English
3. Question Paper should be bilingual
Section A for 50 Marks : Questions in Tamil
Section B for 50 Marks : Same Questions in English
Candidates have to attend both sections
4. Any one who scores 25 in any of the section in Maths, Science, Social Science can be considered to have passed 
(But to pass in English, you need to score 25/50 in Section B and to pass in Tamil, you need to score 25/50 in Section A) 
Advantages
1. Since same lesson in given in opposite pages in English and Tamil, it will be easy for students to learn the concepts and also easy to understand
2. Students' English will improve
3. Students' Tamil will improve
4. Growth of Tamil
5. Same Book for Government as well as private Schools. The present day bifurcation of English Medium Education for those with Money and Tamil Medium Education of those without Money will be stopped 
ஆங்கில வழி கல்வியா, தமிழ் வழிக்கல்வியா என்பது குறித்து என் கருத்துக்கள்
---------------------------------------------------------------------------------------------
1. பள்ளிக்கல்வி இரண்டு வழியிலும் இருக்கவேண்டும். அதாவது இருமொழிவழி கல்வி 
2. புத்தகங்கள் ஆங்கிலம் - தமிழ் இரு மொழிகளிலும் இருக்க வேண்டும் 
இடது புற இரட்டைப்பட எண் பக்கங்களில் தமிழிலும், அதே விஷயங்கள் வலது புற ஒற்றைப்பட எண் பக்கங்களில் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் 
3. கேள்வித்தாள்கள் இரு மொழியிலும் இருக்க வேண்டும்
பகுதி அ - தமிழில் கேள்விகள்
பகுதி ஆ - அதே கேள்விகள் ஆங்கிலத்தில் 
4. கணிதம், விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பகுதியில் குறைந்தபட்சம் 25/50 வாங்கினால் மாணவர் தேர்வானதாக கருத வேண்டும் 
தமிழில் தேர்வாக பகுதி அ வில் 25/50ம் ஆங்கிலத்தில் தேர்வாக பகுதி ஆ வில் 25/50ம் குறைந்த பட்சம் தேவை என்று வைக்கலாம் 
இந்த திட்டத்தின் மூலம் 
1. அடுத்த அடுத்த பக்கத்தில் ஒரு மொழிகளில் ஒரே பாடம் இருப்பதால் புரிந்து கொள்வது எளிது
2. மாணவர்களின் தமிழறிவும் வளரும்
3. மாணவர்களின் ஆங்கில அறிவும் வளரும்
4. தமிழும் வளரும்
5. அரசு பள்ளி, தனியார் பள்ளி என்று அனைத்திலும் ஒரே புத்தகங்கள் 
எனவே பணம் இருப்பவனுக்கு ஆங்கில வழி கல்வி
பணம் இல்லாதவனுக்கு தமிழ்வழி கல்வி என்ற பாகுபாடு மறையும்


Dr. Mariano Anto Bruno Mascarenhas நடத்திய பொது அறிவு உரையாடல். 


அண்மையில் தொடர்வண்டி பயணத்தில் என் எதிரில் இருந்த இருவரின் உரையாடலை கவனிக்க நேர்ந்தது. மே மாத இறுதி என்பதால் பள்ளி, கல்வி குறித்து பேச்சு வந்தது.
ஒருவர் GEல் (அதாவது General Electicals) பணிபுரிகிறாரம்.
சமச்சீர் கல்வியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை விட CBSEல் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அதிகம் தெரியும் என்ற ரீதியில் விட்டுக்கொண்டிருந்தார். 
அவர் அருகில் இருந்தவர் கல்வித்துறையில் மாவட்ட அளவில் பணி புரியும் அதிகாரி. அவர் சமச்சீர் கல்வி என்பது மாணவர்களின் வயதிற்கு ஏற்றது. ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல், நார்வே போன்ற நாடுகளில் 10 வயது மாணவன் கற்பதை இங்குள்ள 10 வயது மாணவனும் அங்கெல்லாம் 15 வயது மாணவன் கற்பதை இங்குள்ள 15 வயது மாணவனும் கற்கும் படி உள்ளது என்று விளக்கிக்கொண்டு இருந்தார்
நமது GE நபரோ CBSE படிக்கும் மாணவர்களின் மூளை வேகமாக செயல்பம். அடுத்தது CBSEல் பொது அறிவு அதிகம். அவர் CBSEல் படித்தவராம். அதனால் தான் அவருக்கு பொது அறிவு அதிகம் என்று விட்டுக்கொண்டு வந்தார். 
”CBSEல் படிப்பவர்களுக்கு மட்டும் தான் சார் பொது அறிவு உண்டு, State Board எல்லாம் அட்டை டூ அட்டை மக் அடிப்பான். அவ்வளவுதான். State boardல் படிப்பவர்களுக்கு தங்கள் புத்தகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது” என்றெல்லாம் தத்துவ முத்துக்களை உதிர்த்துக்கொண்டிருந்தார்
பள்ளி கல்வி அலுவலருக்கு உதவலாம் என்று நானும் கோதாவில் இறங்கினேன் மேலிருக்கும் விளக்கை காட்டி
”சார், இது என்ன ? ”
(முகத்தில் கேள்வியுடன்) ”பல்ப்” 
”இதை கண்டு பிடித்தவர் யார்” 
(முகம் முழுவதும் பிரகாசமாக) ”எடிசன்” (அதாவது அவருக்கு பொது அறிவு அதிகமாம். மின்விளக்கை கண்டு பிடித்தவர் எடிசன் என்ற பொது அறிவை CBSE தந்ததாம். அது தான் அவ்வளவு பிரகாசம்)
”எடிசன் ஆரம்பித்த நிறுவனம் எது”
“சார், அவர் Scientistல”
நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு ”அதான் சார், அவர் தனது கண்டுபிடிப்புகளை எந்த நிறுவனம் மூலம் விற்றார் ” 
”அது தான் நிறைய கம்பெனி பல்ப் வந்ததே . . . .எடிசன் கம்பெனி ஆரம்பிச்சாரா . . . . . .” என்று மென்று விழுங்கிக்கொண்டிருந்தார் . . .
இதற்குள் கல்வி அலுவலர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்
எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை
‪#‎நீங்கள்‬ வேலை பார்க்கும் நிறுவனத்தை ஆரம்பித்து யாரென்றே உங்களுக்கு தெரியவில்லை, நீங்களெல்லாம் அடுத்தவர்களின் பொது அறிவை பற்றி பேசனுமா சார்
பின் குறிப்பு : Quantify of CBSE syllabus is MORE than Quantity of Samacheer. No doubt. The issue discussed here is not that which system forces students to read more.

இந்திப் படித்தால் மார்வாரிப் பெண்களுடன் கடலை எளிதாகப் பழகலாம். புஷ்பக் இந்திப்படத்தைப் புரிந்து கொள்ளலாம். வட நாட்டில் வடை பஜ்ஜி சுட்டு பிழைத்துக் கொள்ளலாம். இன்று போய் நாளை வா பண்டிட் ஆகலாம் என்று மான் கராத்தே பழகுபவர்களைப் பார்க்கும்பொழுது டாக்டர் புருனோவின் Mariano Anto Bruno Mascarenhas இந்தத்தத்துவம்தான் நினைவுக்கு வருகின்றது.

War is something that is glorified only when it happens elsewhere. When your homes are bombed, when you get a son or brother in body bag from war field, you will start to hate war. - told by Mariano Anto Bruno Mascarenhas


Dr. Mariano Anto Bruno Mascarenhas அவர்களின் மொழி வழிக் கல்விப் பற்றிய கருத்துகள்
1. இங்கு அடிப்படை பிரச்சனை தமிழ் மொழியா ஆங்கில மொழியா 
என்பதல்ல - காசு இருப்பவனுக்கு ஒரு மொழியில் கல்வி, காசு இல்லாதவனுக்கு ஒரு மொழியில் கல்வி இதை ஏற்க இயலவில்லை
2. அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்று பிரிந்திருப்பது சரியா என்பதை சிந்திக்க வேண்டும்
3.எந்த ஒரு விஷயமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் இருக்கும் வரை தான் அது மேட்டிமைத்தனத்தின் அடையாளம் அதே விஷயம் பொதுவாக வந்து விட்டால் அது மேட்டிமை அடையாளம் அல்ல
1950கள் வரை பள்ளி கல்வி என்பதே மேட்டிமைத்தனம் தான்
காமராஜர் வந்த பிறகு தான் பள்ளி கல்வி பொதுவானது
1970கள் வரை அரசு வேலை என்பது மேட்டிமைத்தனம் தான்
கலைஞர் வந்த பிறகு அது பொதுவானது 
1980கள் வரை மருத்துவம், பொறியியல் படிப்பு மேட்டிமைத்தனம் தான்
புரட்சித்தலைவர் வந்த பிறகு அது பொதுவானது
1990கள் வரை செல்லிடப்பேசி மேட்டிமைத்தனம் தான்
அனைவரும் பயன்படுத்திய பிறகு பொதுவானது
2000கள் வரை கணினி, இணையம் மேட்டிமைத்தம் தான்
அனைவரும் பயன்படுத்திய பிறகு பொதுவானது
இன்று ஆங்கில வழி கல்வி மேட்டிமைத்தனமாக உள்ளது
அதை அனைவருக்கும் எடுத்து சென்றால் அது மேட்டிமைத்தனம் என்பது மாறிவிடும்
4. 2013ல் நிலை என்னவென்றால் தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழ் வழி கல்வி தமிழர்கள் வளர வேண்டுமென்றால் ஆங்கில வழி கல்வி
5. இணையமும் ஒருங்குறியும் இருக்கும் போது ஒரு தலைமுறை ஆங்கில வழி கல்வி கற்பதால் தமிழ் அழிந்து விடாது
மாறாக ஒரு பெரும் சமூகத்திற்கு நாம் தன்னம்பிக்கையை விதைக்கலாம்


The language Tamil and people Tamils owe a lot to these guys --> Joe Becker from Xerox and Lee Collins and Mark Davis from Apple. via Mariano Anto Bruno Mascarenhas

தன்னைப்போல் பிறரையும் நேசி என்று கூறி ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் அனைவருக்கும் பகிர்ந்து அளித்தவர் தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் via Mariano Anto Bruno Mascarenhas


No comments:

Post a Comment