Sunday, January 24, 2016

தாய்மொழி வழி கல்வியே சிறந்தது என்பது என் கருத்து ஆனால் அது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்

https://www.facebook.com/photo.php?fbid=10151944310734828&set=a.497812629827.278402.722399827&type=3

June 2, 2014


தாய்மொழி வழி கல்வியே சிறந்தது என்பது என் கருத்து
ஆனால் அது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்
-oOo-
அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி வழிக் கல்விப் பற்றிய எனது சில கருத்துகள்
1. இங்கு அடிப்படை பிரச்சனை தமிழ் மொழியா ஆங்கில மொழியா
என்பதல்ல - காசு இருப்பவனுக்கு ஒரு மொழியில் கல்வி, காசு இல்லாதவனுக்கு ஒரு மொழியில் கல்வி இதை ஏற்க இயலவில்லை
2. அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்று பிரிந்திருப்பது சரியா என்பதை சிந்திக்க வேண்டும்
3.எந்த ஒரு விஷயமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் இருக்கும் வரை தான் அது மேட்டிமைத்தனத்தின் அடையாளம் அதே விஷயம் பொதுவாக வந்து விட்டால் அது மேட்டிமை அடையாளம் அல்ல
1950கள் வரை பள்ளி கல்வி என்பதே மேட்டிமைத்தனம் தான்
எழுதப்படிக்க தெரிவது மிகவும் பெரிய விஷயம்
தபால்காரர் தான் கடிதத்தை படித்து கூற வேண்டிய நிலை இருந்தது
சத்துணவு வந்த பிறகு தான் பள்ளி கல்வி பொதுவானது
1970கள் வரை அரசு வேலை என்பது மேட்டிமைத்தனம் தான்
இடப்பங்கீடு வந்த பிறகு அது பொதுவானது
1980கள் வரை மருத்துவம், பொறியியல் படிப்பு மேட்டிமைத்தனம் தான்
நேர்காணல் முறை சென்ற பிறகு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு என்று வந்த பிறகு அது பொதுவானது
1990கள் வரை செல்லிடப்பேசி மேட்டிமைத்தனம் தான்
அனைவரும் பயன்படுத்திய பிறகு பொதுவானது
2000கள் வரை கணினி, இணையம் மேட்டிமைத்தம் தான்
கணினியை பயன்படுத்த கணினி பயனாளர் ஒருவர் தனியாக இருந்தார்
கணினியை அனைவரும் பயன்படுத்திய பிறகு பொதுவானது
இன்று ஆங்கில வழி கல்வி மேட்டிமைத்தனமாக உள்ளது
நாம் அதை அனைவருக்கும் எடுத்து சென்றால் ஆங்கில வழி கல்வி மேட்டிமைத்தனம் என்பது மாறிவிடும்
4. 2013ல் நிலை என்னவென்றால்
தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழ் வழி கல்வி
தமிழர்கள் வளர வேண்டுமென்றால் ஆங்கில வழி கல்வி
5. இணையமும் ஒருங்குறியும் இருக்கும் போது ஒரு தலைமுறை ஆங்கில வழி கல்வி கற்பதால் தமிழ் அழிந்து விடாது
மாறாக ஒரு பெரும் சமூகத்திற்கு நாம் தன்னம்பிக்கையை விதைக்கலாம்
-oOo-
அனைத்து பள்ளிகளிலும் (தனியார் பள்ளிகள் உட்பட) தமிழ் வழி பாடம் கொண்டு வருவது தான் மிகச்சிறந்த முடிவு
அப்படி செய்ய முடியாத பட்சத்தில் அனைத்து பள்ளிகளிலும் (அரசு உட்பட) ஆங்கில வழி பாடம் இருக்க வேண்டும்
என்னிடம் காசு உள்ளது எனவே என் பிள்ளை ஆங்கிலம் படிப்பான்
தமிழை வாழவைக்க காசு இல்லாதவனின் பிள்ளை தமிழ் படிக்க வேண்டும் என்பது
-oOo-
#HematoTomatoDoctrine புரியவில்லை என்றால் மறுமொழிகளில் கேட்கலாம்

No comments:

Post a Comment